Categories
விளையாட்டு

“சுதந்திர தினம் முன்னிட்டு”… எம்.எஸ்.டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படம் மாற்றம்….!!!!!

நம் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் விதமாக சுதந்திரதின அமிர்த பெருவிழா எனும் பெயரில் மத்திய அரசு பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசிய கொடி எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரை 3 நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச்செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சென்ற 2ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூகஊடக கணக்குகளில் முகப்புபடமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார். அதன்பின் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உட்பட பல தரப்பினரும் தங்களது சமூகஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.டோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்புபடத்தை மாற்றியிருக்கிறார். அதாவது தேசியக் கொடியை முகப்பு படமாக அவர் மாற்றி இருக்கிறார். டோனி சமுகவலைதளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |