உக்ரைனில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவிலிருந்து ரஷ்யா உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,654 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து உக்ரைனின் ஆயுதப் படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை. தற்போது உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் நடத்தும் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெலாரிசில் ரஷ்யா-உக்ரேன் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இதனால் மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. அந்நகரத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கிவ்-வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக சுதந்திரமாக வெளியேறலாம் என்றும், இந்த பாதை மக்களுக்காக திறக்கப்பட்டதுடன் மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு நீக்கப்படவில்லை என்ற அறிவிப்பை ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ளது.