1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது ஜோமதார் நீதிபதி ஹபிபுல் ஆலம் போன்றவரை கொன்ற அமர்வு வழக்கை விசாரணை செய்தது விசாரணையின் முடிவில் அஸ்மத் உசேன் ஹவ்லதேர், முகமது சகார் அலி சாத்தார்,
முகமது அடியார் ரகுமான் ஷேக், முகமது மொடாசின் பில்லா, முகமது கமால் உதிர் கோல்டார்,முகமது நஸ்ருல் இஸ்லாம் போன்ற ஆறு பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதிகள் அவர்கள் அனைவரும் மரண தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேலும் தண்டிக்கப்பட்ட ஆறு பேரில் முகமது நஸ்ருல் இஸ்லாம் மட்டும் இன்னும் பிடிப்படாமல் தலைமுறைவாக இருக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வழக்கில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் விசாரணையின் போது முகமது மொஜாகார் அலி ஷேக் என்பவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.