Categories
தேசிய செய்திகள்

சுடுகாட்டில் இரவு பகலாக தொடர்ந்து எரியும் பிணங்கள்… வைரலாகும் காட்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சுடுகாட்டில் வரிசை வரிசையாக பிணங்கள் எரிக்கப்படுகின்றன. இரவு பகலாக தொடர்ந்து பிணங்கள் எரிந்துக்கொண்டிருக்கின்றன.

Categories

Tech |