Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை அதிகாரி… கொரோனா பாதிப்பு உறுதி… உ.பி.யில் அச்சம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை தலைமை செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மோகன் பிரசாந்த் என்பவர் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று வெளியான முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை மூத்த மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் கொரோனா பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை உத்திரபிரதேச மாநிலத்தின் ஊடகங்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

Categories

Tech |