Categories
தேசிய செய்திகள்

சீன ராணுவத்தின் உத்திகளை அறிய…. இந்திய ராணுவம் அதிரடி முடிவு….!!!!!

இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான  ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க  இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான  இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் இதர பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை.

இந்த நிலையில் சீன வீரர்களின் உத்திகளையும், அவர்களின் கண்காணிக்கைகளை அறிந்துகொள்வதற்காக நம் ராணுவ வீரர்களுக்கு மாண்டரின் மொழியைப் பயிற்றுவிக்க இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் தகவல் மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. எனவே இதில் இந்திய ராணுவம் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Categories

Tech |