Categories
உலக செய்திகள்

“சீனாவில் மீண்டும் ஒரு பயங்கரம்!”…. ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்கு…. காத்திருந்த சோகம்….!!!!

தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் அரசு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த ஹோட்டல் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கேஸ் வெடித்துள்ளது. இதனால் ஹோட்டல் முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்னர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதில் முதல்கட்டமாக 3 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் பலத்த காயம் அடைந்தவர்கள் பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Categories

Tech |