Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா… நிரம்பி வழியும் தகனங்கள்… வெளியான தகவல்…!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த  கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக பதிவாகவில்லை. நிமோனியா மற்றும் சுவாச கோளாறு போன்ற பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று சீனாவில் கொரோனாவால் தினமும் 5000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. சி.என்.என் அறிக்கையின்படி பெய்ஜிங்கில்  உள்ள ஒரு பெரிய தகனக்கூடம் முழுவதுமாக நிரம்பியுள்ளது. மேலும் தகனம் செய்யும் பகுதிக்கு வெளியே நீண்ட வரிசையில் கார்கள் உள்ளே வருவதற்காக காத்திருகின்றன. உலைகளில்  இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |