ஓட்டலில் சப்பாத்தியை எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஒரு சாலையோர ஓட்டல் கடையில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. இந்த அருவருக்கத்தக்க வீடியோவை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया है, जिसमें एक शख्स थूक लगाकर रोटी बनाता दिख रहा है. pic.twitter.com/utDi9Jh9F8
— Anubhav Shakya (@AnubhavVeer) October 17, 2021
புகாரின் பெயரில் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஓட்டலின் சமையல்காரராக தமீசுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.