தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவாணியங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பரந்தபடியே சென்றது. பின் சிறிது நேரத்தில் அவ்வழியாக அந்த விமானம் மீண்டும் தாழ்வாக பறந்து சென்றது.
இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை பறந்தது. பின் மதுரையை நோக்கிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.