Categories
தேனி மாவட்ட செய்திகள்

சில வருஷமாவே இவருக்கு இப்படி இருந்திருக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் கூலித் தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த சில வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 7 தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் செந்தில் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |