Categories
சினிமா தமிழ் சினிமா

“சில போதைப் பொருட்களுக்கு வாசம் கூட தெரியல” அதுக்கு ஏதோ பேர் வேற சொல்றாங்க…. நடிகர் கார்த்தி கருத்து….!!!!

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, போதை பொருள் பழக்கம் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இருக்கிறது. மதுபானம், சிகரெட் போன்ற போதை பொருட்களின் வாசம் தெரியும். ஆனால் சில போதைப் பொருட்களின் வாசம் கூட தெரிவதில்லை.

சிலர் தான் போதை பொருட்களை தான் விற்பனை செய்கிறோம் என்பது கூட தெரியாமல் விற்பனை செய்கிறார்கள். அவற்றிற்கு ஏதோ பெயர் கூட சொல்கிறார்கள். குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மேலும் போதைப் பொருள் பழக்கத்தை ஒழிப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |