‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.
வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு மணமகள் தனது திருமண நிகழ்வில் இவ்வாறு நடந்துள்ளார். அதாவது ‘சில் திதி சில்’ என்ற வேடிக்கையான இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண சடங்குகள் தொடங்கியதும், ஐயர் மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுக்கக்கூடிய சில இனிப்புகளை வழங்குகிறார்.
அப்போது மணமகள், மணமகன் ஊட்டிய பர்பியை கோபத்தில் திடீரென கூட்டத்தில் தூக்கி எறிந்துள்ளார். இதன் பிறகு பூசாரி அந்த மணமகளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்துள்ளார். அதனை மணமகனுக்கு அவள் குடிக்க கொடுக்கும் போது, அவர் குடிக்க மறுத்ததால் மணமகள் அதையும் கோபத்தில் தூக்கி எறிகிறார். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை.
ஆனால் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. மேலும் இதை பார்த்த பார்வையாளர்கள், மணமகளுக்கு மணமகனுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், இது போன்று திருமண நாளில் சண்டையிட்டால், இந்த திருமணம் நீடிக்காது என்றும் பல தங்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.