சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.