இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்தே சௌந்தர்யாவுக்கு உடல்நலத்தில் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.