Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுவனை காப்பாற்றிய தொழிலாளி…. தண்ணீரில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள குஞ்சாண்டியூர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜய்யும், வனிதாவும் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலைய புதுப்பாலம் அருகே இருக்கும் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து உறவினர் ஒருவரின் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த விஜய் உடனடியாக சிறுவனை காப்பாற்றிவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக விஜய் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை காவிரி ஆற்றில் விஜய்யின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |