Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… ஆட்டோ டிரைவர் கைது… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சூரியகவுண்டம்பாளையம் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி தங்கராசுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்நிலையில் இதற்க்கான இறுதி விசாரனை நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தங்கராசுக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனையும் 11,000 ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் தங்கராசுவை பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |