பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டியில் வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் என்ற மகன் உள்ளார். கனகராஜ் விவசாயம் செய்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கனகராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.