Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தை குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |