அண்மைக்காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வந்த அமலாபால் தற்போது மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். இவர் அண்மைகாலமாவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் நடிகர் ஒருவரிடம் மோதல் என சொல்லப்பட்டது. இதனிடையே தெலுங்கு சினிமாவை விமர்சித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பல கண்டனங்களும் குவிந்தது. இந்த நிலையில் அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார்.
அவர் தனது பொழுதை ஜாலியாக கழித்து வருகின்றார். மேலும் அவர் கடற்கரையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் எனக் கூறிவருகின்றார்கள். அமலா பால், எந்த பிரச்சனையும் இல்லாமல் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும் சிறிது நாட்கள் இந்த நிம்மதி தனக்கு தேவைப்படுவதாகவும் நெருங்கிய நண்பர்களிடம் கூறியிருக்கின்றாராம் குறிப்பிடத்தக்கது.