Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. சக்கரத்தில் சிக்கி “பலியான வாலிபர்” அஞ்சலி செலுத்திய அதிகாரிகள் ….!!!!!

கோவில் சப்பரத்தின்  சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தராபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 86அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமி விதி உலா நடைபெற்றது. இந்நிலையில் சப்பரம் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சக்கரத்தில் முட்டுக்கட்டை போடும் பணியில் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் என்பவர் ஈடுபட்டார்.

அப்போது திடீரென சப்பரத்தின்  சக்கரம் தீபன்ராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த  தீபன்ராஜை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீபன்ராஜின்  உடலுக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதன்பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தீபன்ராஜின் உறவினரிடம் அதிகாரிகள்  வழங்கியுள்ளனர் .  மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |