மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் சிம்பு கௌதமேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைவதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக பத்துதல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு.
மேலும் கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ் குமார், ஸ்ரீ முரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முக்தி படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. தமிழிலும் இயக்குனர் நாரதனை இயக்கி வந்துள்ளார். தமிழ் ரீமேக்கில் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு நரதன் கமிட்டாகி உள்ளார். இதனால் முத்தி படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சனைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு படத்தை இயக்குவதற்கு சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா கமிட் ஆகியுள்ளார்.
10 தலை என பெயரிடப்பட்டிருக்கின்ற படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷிய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு பாதியிலேயே ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டதாகவும் இயக்குனர் சொல்லியும் கேட்காமல் ஒரு மாதம் டைம் கேட்டு படப்பிடிப்பிலிருந்து சென்று விட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த செய்தி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. ஆனால் தற்போது இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இதனை மறுத்திருக்கின்றார். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிம்பு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றார். மழையின் காரணமாகவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் 10 தல படத்தை வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட வட குழுவினர் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.