நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் முன்னிட்டு நடிகர் கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகர் ஆன கூல் சுரேஷ் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி ரெட் ஜெயன்ட் வெளியிடும் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.எனவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.