Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவின் வெந்து தணிந்தது காடு”…. டப்பிங் பணிகளை முடிவு செய்தார் சித்தி இத்தானி….!!!!!!!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தனிந்து  காடு படத்தில் சிம்பு நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்றப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இந்த படத்தில் கதாநாயகிகளாக கைடு லோகர் மற்றும் சித்தி இத்னானி போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் நடிகர் சிம்பு டப்பிங் பணியை நிறைவு செய்தது பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை சித்தி இத்தானி படத்தில் தன்னுடைய டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூறியுள்ளார். இயக்குனர் கௌதம் மேனனுடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள அவர் பாவையின் டப்பிங் முடிந்தது. என்னை நம்பி என்னுடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய அனுமதித்ததற்கு  நன்றி கௌதம் மேனன்  சார் நான் ஜீவிஎம் ஹீரோயின் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |