Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாவில் காதல் வலை…. வசமாக சிக்கிய16 வயது சிறுமி…. இளைஞரை தேடும் போலீசார்….!!!

இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவர நகையை மிரட்டி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் 16 வயது மகள் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல சுற்றி வந்துள்ளனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடம் இருந்து தங்க நகையை வாங்கி விற்று சந்தோஷமாக இருந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரித்த போது சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |