மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ்(34) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் சாம்ராஜின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெடி விபத்தில் சாம்ராஜ் உயிரிழந்தாரா? அல்லது டிராக்டருடன் தவறி விழுந்து இறந்தாரா? பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.