Categories
மாநில செய்திகள்

சிஏஏ சட்டம் திரும்ப பெறமுடியாது… ஜேபி.நட்டா திட்டவட்டம்…!!!

சிஏஏ சட்டம் திரும்பப் பெற முடியாது என்றும் அது தொடர்பாக நாங்கள் அதிமுகவிடம் பேசுவோம் என்றும் ஜேபி.நட்டா கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிஏஏ சட்டம் திரும்பப் பெறுவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு அதைத் திரும்பப் பெற முடியாது. அது தொடர்பாக நாங்கள் அதிமுகவிடம் பேசுவோம் என பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கூறியுள்ளார். மேலும் நிலம், மண் பரிசோதனை மேற் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே எய்ட்ஸ் தாமதமாகிறது. விரைவில் சிக்கல்கள் சரி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |