Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாவிலும் இணை பிரியாத தம்பதி…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காலையில் அவர்களது வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேர் உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |