Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சாலையை சீரமைக்கக் கோரிக்கை”… நூதன முறையில் போராட்டம்…!!!!

சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை நடத்தினார்கள்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு ஊராட்சியில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைக்கக் கோரி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாடைகட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்த போராட்டமானது சாலை கடையைத் தொடங்கி ஆதிரங்கம் வரை நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஒருவர் பிணம் போல் மாலையணிந்து ஒருவர் 8படுத்துகிடக்க அவரைப் ஆடையாக ஊர்வலம் தூக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதன் பின் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலையை சீரமைக்க வாக்குறுதி அளித்த பின்னரே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |