சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சந்தைப்பேட்டையில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிமுத்துவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.