மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாய் இறந்தது. மேலும் படுகாயமடைந்த அழகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.