ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டத்தில் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “அமெரிக்காவைப் பார்த்து ரொம்ப நாள் கடந்து விட்டதால் தற்பொழுது பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி பலநாடுகளை சுற்றியதால் ஏதேனும் பயன் உள்ளதா? மாற்றம் ஏதும் நிகழ்ந்து உள்ளதா?
இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்களை துரத்திவிட்டு தற்பொழுது இங்க வர்த்தகம் செய்ய வருமாறு விமானம் மூலம் அவர்களை அழைக்கின்றார்கள். இந்தியாவின் பொருளாதார நிலைமை இதுவே ஆகும். மேலும் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, சீமானின் அம்மா தமிழரா? இல்லை மலையாளியா? என்ற எழுப்பிய கேள்வியை பத்திரிகையாளர்களில் ஒருவர் சீமானிடம் கேட்டார். அதற்கு அவர் நான் எப்பொழுதும் பத்திரிகையாளர்கள் மீது மிகவும் பரிதாபப்படுவேனே, தவிர அவர்களுக்கு பதில் அளிக்க மாட்டேன். என்று கூறினார்.