Categories
உலக செய்திகள்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… மே 8 ம் தேதி வங்கி விடுமுறை… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. இதில் பாரம்பரிய மரபு படி கையில் செங்கோல், தடி போன்றவற்ற ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்கின்றார்.

அதன் பின் மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித ஏட்வர்ட்டின் கிரீடம் சூட்டப்படும். அதனை அடுத்து பக்கிங் ஹாம் அரண்மனையின் பால் கனியிலிருந்து சார்லஸ் மன்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அரசு மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவைமுன்னிட்டு அவருக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக மே 8ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது பற்றி இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அடுத்த வருடம் நடைபெற உள்ள மாட்சிமை மிக அரசு மூன்றாம் சார்லஸின் முடி சுட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்திருக்கிறார்.

இதன்படி மே 6ஆம் தேதி சனிக்கிழமை முடிசூட்டு விழாவை தொடர்ந்து மே 8-ம் தேதி திங்கள்கிழமை வங்கி விடுமுறையாக இருக்கும் என கூறியுள்ளது. மேலும் இது பற்றி பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது புதிய அரசரின் முடிசூட்டு விழா எங்களது நாட்டின் தனித்துவமான தருணம் இந்த வரலாற்று நிகழ்வை அங்கீகரிக்கும் விதமாக அடுத்த வருடம் இங்கிலாந்து முழுவதும் அன்றைய தினம் கூடுதலாக ஒரு வங்கி விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையிலும் அவருக்கு கௌரவம் அளிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.

Categories

Tech |