மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளத்தில் கூலி தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இந்நிலையில் ஜெயராஜ் மோட்டார் சைக்கிள் மீது கையை வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜெயராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.