Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல் துறையினர்….!!

சேலம் மாவட்டத்தில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மாரமங்களம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் வீட்டில் திருட்டுத் தனமாக சாராயம் விற்பனை செய்ததாக காவல் துறையின் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி காவல் துறையினர் சுப்பிரமணி வீட்டில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு சாராயம்  காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவரிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சாராயம் காய்ச்சியதற்க்காக  சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |