Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாயக்கழிவு உப்பை கடலில் கரைக்க முடியுமா?…. களத்தில் இறங்கிய விஞ்ஞானி குழு…..!!!

திருப்பூர் மாவட்டத்தில் 18 சாயக்கழிவுநீர், பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ளது. இவற்றில் “ஜீரோ டிஸ்சார்ஜ்” தொழில்நுட்பத்தில் சுத்தரிக்கப்படுகிறது. இறுதி நிலையில் கலவை உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் இல்லாததால் இந்த கலவை கழிவு உப்புக்கள் சுத்திகரிப்பு மையங்களில் தேக்கி வைக்கப்படுகின்றனர். இதனால் 45 டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது. இந்த உப்புகளை அகற்றும் வழிமுறைகளை கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் குழுவை தமிழக ஜவுளித்துறை நியமித்து உள்ளது. இக்குழுவின் தலைவரான மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகம், கடந்த மூன்று நாட்களாக திருப்பூரில் முகாமிட்டு சுத்திகரிப்பு மைய இயக்கம், தேங்கியுள்ள கழிவு உப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், திருப்பூர் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு, மையக்கழிவு உப்பி சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், மெக்னீசியம் மற்றும் கால்சியம் கார்பனைட் கலந்துள்ளது. சோடியம் குளோரைடு சோடியம் சல்பேட் உப்புகளை பிரித்தெடுக்க அதிக தொகை செலவாகும். இந்த கழிவு உப்புகளை கடலில் கரைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். இதனையடுத்து கழிவு உப்புகளை கரைத்து ஆய்வக அளவிலும், கடல்வாழ் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கடலில் கரைத்தும் மாதிரிகள் சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் தொடர் ஆராய்ச்சி மூலம் விரைவில் கழிவு உப்பை அகற்ற சிறந்த வெளி கண்டறியப்பட்டு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |