ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை விஷம் வைத்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மருமகள் கனிமொழி. இந்நிலையில் முருகேசன் தன்னுடைய மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கனிமொழி சம்பவத்தன்று சாம்பாரில் விஷம் கலந்து தன்னுடைய மாமனாருக்கு கொடுத்துள்ளார். இதனால் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் கனிமொழியை கைது செய்துள்ளனர்.