Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்ட நபர்…. திடீரென செய்த திருட்டு செயல்…. வெளியான சி.சி.டி.வி. காட்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா எனும் கிராமத்தில் பெண் தெய்வத்துக்கான ஒரு கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயிலுக்கு ஒரு  நபர் சட்டை இல்லாமல், முகமூடி அணிந்துகொண்டு திருட சென்றுள்ளார். கோயிலின் திரை சீலையை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார். இதையடுத்து அந்நபர் தலை வணங்கி சாமி கும்பிட்டுவிட்டு கோயிலில் இருந்த உண்டியல் பெட்டியை தூக்கி சென்றுள்ளார்.

இக்காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த நபர் கோயிலின் இரு பெரிய மணிகள் மற்றும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்த பொருட்கள் உள்ளிட்டவற்றையும் திருடி சென்றுவிட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் விமர்சனம் வெளியிட்ட ஒருவர், கோயிலின் கருவறையிலிருந்து பக்தர் ஒருவர் திருடி செல்கிறார் எனில் அது திருட்டு ஆகாது. தனது கடினசூழலில் அந்த பக்தர் இறைவனிடம் உதவி கேட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். அதேபோன்று மற்றொருவர், அந்த திருடர் ஒரேநேரத்தில் தன் இறை நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்து கொண்டதுடன், தன்னுடைய தொழிலையும் செய்து இரட்டை பலன்களை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |