Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டபோது பற்றிய தீ…. உடனே மூதாட்டியை காப்பாற்றிய காவலர்… குவியும் பாராட்டு!!

பெரம்பூரில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் பற்றிய   தீயை துரிதமாக அணைத்தார் போக்குவரத்து தலைமை காவலர்.. 

சென்னை பெரம்பூரில் அகரம் சந்திப்பில் அமைந்துள்ள கோவிலின் வெளியே உள்ள சாமி சிலைக்கு 60 வயதான மூதாட்டி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கிலிருந்து மூதாட்டியின் புடவைக்கு தீ பற்றியுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் சற்றும் யோசிக்காமல் உடனடியாக மூதாட்டியை கீழே  உருட்டி புடவையிலிருந்து உடம்புக்கு தீ வரவாமல் அணைத்தார். அந்த முதாட்டி காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் காவலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மூதாட்டியை காப்பாற்றிய காவலருக்கு பொது மக்களும் , உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |