Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாப்பிட சென்ற தொழிலாளி… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பி உரசி தேங்காய் உறிக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள சேர்வைக்காரன்ஊருணி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரது தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல வேலைக்கு சென்ற கோவிந்தன் வேலை முடித்து மதிய உணவு சாப்பிட கம்பெனியின் மாடிக்கு சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி கோவிந்தனின் கழுத்தில் உரசி மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருப்புல்லாணி காவல்துறையினர் கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |