Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டில் கிடந்த முடி…. மனைவிக்கு மொட்டை அடித்த கணவர்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அப்போது சாப்பாட்டு தட்டில் முடி இருப்பதை பார்த்து கோபமடைந்த கணவர் சீமாதேவியின் தலையை மொட்டை அடித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சீமாதேவி திருமணமானதிலிருந்து வரதட்சணை கேட்டும் மாமியார் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |