ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகேந்திரனின் தாய் அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.