Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சானிடைசர் வைத்து விளையாட்டு…. விபரீதத்தில் முடிந்த சம்பவம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், முகுந்தனுக்கு நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சானிடைசர் தீப்பிடித்து இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |