விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது.
இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது.
கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் டிஆர்ஓ கலெக்டர் லைசென்ஸ் பெற்று ஆபத்து இல்லாத வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் விதிகளுக்கு மாறாக பேன்சி ரக வெடிகளை தயாரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.