Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் எஸ்.ஐ ரகுகணேஷுக்கு மருத்துவ பரிசோதனை….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார்.

உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்ததாக சொல்லப்பட்டது, அதேபோல விசாரணைக்காக கஸ்டடியில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது உதவி ஆய்வாளர் ரகுகணேசை கைது செய்த சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தற்போது காவல் துணை ஆய்வாளரை கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இதில் எஸ்.ஐ ரகு கணேஷுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகின்றது.

Categories

Tech |