Categories
அரசியல்

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற…. “அனிதா தேசாயின் மலைமேல் நெருப்பு”… சில ஸ்வாரசிய தகவல் இதோ…..!!!!!!!

அனிதா தேசாய் 1937 ஆம் வருடம் பிறந்தவர். இவருடைய தந்தை வங்காளதேசத்தை சேர்ந்தவர், தாயார் ஜெர்மன். அனிதா தேசாய் டெல்லிக்கு சென்று கல்வி கற்று இருக்கின்றார். தெளிவான பகல் பொழுது, கட்டுப்பாட்டு நிலையில், விருந்தும் உபவாசமும் போன்ற மூன்று நாவல்கள் புக்கர் பரிசு தேர்வில் இறுதி சுற்று வரை வந்தது. இவர் சாகித்ய அகாடமி ஆங்கில குழுவின் அங்கத்தினராகவும் பணியாற்றியுள்ளார். 1998 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆங்கில நாவல் மலை மேல் நெருப்பு கரிக்னோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் எனும் மூதாட்டியை சுற்றி வருகிறது இந்த புதினம்.

இந்த கதாபாத்திரத்தை அனிதா தேசாய் வெகுலாவகமாக கையாண்டிருக்கின்றார். அசோகமித்திரன் இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளார். நந்தா கவுலின் கொள்ளுப்பேத்தி ராக்காவின் வருகையால் நந்தா  கவுலுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களை நன்கு சித்தரித்து இருக்கின்றார். கவுலின் தோழி இலா தாஸின் தோற்றம் எளிமையான சோகமான நகைச்சுவையை உணர்த்துகின்றது.நந்தா கவுல் தனிமையில் ஒரு மலைவாழ் பகுதியில் வாழ்ந்து வருபவர்.

அவர் ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மனைவி அவரது கணவர் இறந்த பின் தன் சொந்தங்களையெல்லாம் விட்டு தனிமையில் கசவுரியில் உள்ள கரிக்னோவில் வாழ்ந்து வருகின்றார். அவருடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்ய ராம் லால் எனும் ஒரு வேலையாள்  அவளிடம் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் அவளுடைய பெண் வயிற்று பேத்தி ஒருவர் அவளை பார்க்க வருவதாக தகவல்கள் வருகிறது பேத்தி ராக்கா  வந்து சேர்கின்றாள். அவளும் நந்தாவை போல தனிமையை விரும்புவராக  உள்ளார். இப்படியாக கதை சென்று கொண்டிருக்கும்போது நந்தாவின் தோழி இலா  தாஸ்  அவளை பார்க்க வருகின்றார். சமூக சேவையான அவள் வருகையின் மூலம் தனது பழைய நினைவுகளில் மூழ்க வேண்டியதாக உள்ளது.

நந்தாவின் கணவர் எப்படி அவர் மேல் அக்கறை இல்லாமல் இருந்தார் அவர் ஒரு விரிவுரையாளருடன் அவருக்கிருந்த நட்பின் காரணமாக இவளுக்கு இருந்த மன அழுத்தம் போன்றவை எல்லாம் நினைவுக்கு வருகின்றது. இந்த சோகத்தின் வெளிப்பாடு தான் அவள் தனிமையில் இந்த மலையில் தனியாக வாழ்வதற்கு காரணம் என சொல்லாமல் சொல்கின்றார் ஆசிரியர். இலா தாஸ் நந்தாவை பார்த்துவிட்டு செல்லும் வழியில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறார் எனவும் அவளை நந்தா வந்து அடையாளம் காட்ட அழைக்கப்படுவதும் அதன் பொருட்டு அவள் அடையும் சோகம் இப்படியாக கதை முடிகின்றது. நந்தா, ராக்கா, இலா தாஸ்  போன்ற எல்லா பாத்திரங்களும் மனதில் பசுமையாக நிற்கின்றது. பாத்திர வடிவமைப்பும் வெகு நேர்த்தியாக உள்ளது. மேலும் அந்த மலைப் பிரதேசத்தின் தொன்மை அதன் பின்புலம் போன்றவற்றையும் நன்றாக விளக்கியுள்ளார் அனிதா தேசாய்.

Categories

Tech |