Categories
கிரிக்கெட் விளையாட்டு

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு இன்று காலை மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் உடல் நிலை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

Categories

Tech |