Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சலூன் கடைக்காரர் கொடூர கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சலூன் கடைக்காரர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையம் புதூர் அம்மன் நகரில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் இந்து முன்னணி பிரமுகரான ராமன் என்பவரது முன்னிலையில் இளங்கோ என்பவரிடமிருந்து சசிகுமார் 5 லட்ச ரூபாய் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடனாக வாங்கியுள்ளார். பல நாட்களாகியும் கடன் தொகையை திரும்ப கொடுக்கவில்லை. இது தொடர்பாக சசிகுமார், ராமன், இளங்கோவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ராமன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் சசிகுமாரின் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.

அப்போது வெளியே வந்த சசிகுமார் இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்தீர்கள்? எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சிறிது நேரம் பேசிய பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராமன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் இணைந்து கத்தியால் சசிகுமாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |