Categories
உலக செய்திகள்

சர்வதேச விளையாட்டுகளில்இரு நாடுகளும் பங்கேற்க தடை… அதிரடி முடிவில் ஒலிம்பிக் கமிட்டி குழு ….!!!

சர்வதேச போட்டிகளிலிருந்து ரஷ்யாவை தடைசெய்ய வேண்டுமென விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

உக்ரைன்  மீது ரஷ்யா ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்தியதன் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் உக்ரைன்  தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையில் உக்ரைன்  மீதான தாக்குதலுக்கு உலக அளவில் கண்டன குரல் எழுந்து வருகிறது.பல்வேறு நாடுகளும் ரஷிய  நிறுவனங்களுக்கு தடை விதித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச விளையாட்டுகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ்  ஆகிய நாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |