Categories
மாநில செய்திகள்

“சர்வதேச சிறுதானிய ஆண்டு”…. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |